மேலும் 17 பேருக்கு கரோனா உறுதி... முதல்வர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது வரை கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக கேரளா, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் அரசு தேவையான சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும், முக்கியமான மருத்துவமனைகள் அனைத்தும் தர உயர்த்தப்பட்டு, அதிகளவு மக்கள் பாதிக்கப்படும் பட்சத்திலும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய சமயத்தில், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இவர்களில் 10 பேர் ஈரோட்டை சார்ந்த நபர்கள் என்ற அதிர்ச்சி செய்தியும் வெளிவந்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனைப்போன்று வெளிமாநிலத்தில் இருக்கும் பணியாளர்களை கண்டறிய குலுக்குள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu 17 members corona virus confirmed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->