தமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை?..!!
in tamilnadu 12 districts have rain
தமிழகத்தின் பிரதானமாக மழையை தரும் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிறைவு பெற்ற நிலையில்., தமிழகத்திற்கு இன்னும் மழை உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில்., தற்போது தமிழகத்திற்கு வரும் 24 மணிநேரத்தில் சுமார் 12 மாவட்டங்களுக்கு மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது., பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ மழையும்., திருத்தணியில் 2 செ.மீ மழையும்., விருத்தாசலத்தில் 1 செ.மீ மழையும் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்று வேக மறுபாட்டின் காரணமாக வரும் 24 மணிநேரத்தில் சென்னை., திருவள்ளூர்., காஞ்சிபுரம்., செங்கல்பட்டு., திருவண்ணாமலை., கடலூர்., விழுப்புரம்., அரியலூர்., பெரம்பலூர்., தஞ்சாவூர்., திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம்.
இந்த மழையானது வரும் 8 ஆம் தேதி வரை நீடிக்கும். இதற்கு பின்னர் வறண்ட வானிலை நிலவும்.. தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்த அறையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும்., சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tamilnadu 12 districts have rain