பாம்பு கடித்து ஏற்பட்ட உயிரிழப்புகள் தமிழகத்தில் எத்தனை தெரியுமா?..!
in tamilnadu 10 thousand peoples died snake byte
இந்த உலகத்தில் பலரும் பல விதமான காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர். விபத்துகள்., தற்கொலைகள்., இயற்கை மரணங்கள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகள்., இயற்கை பேரிடர்கள் என்று உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில்., மக்களின் பிறப்பு விகிதத்தை கணக்கில் எடுத்து கொள்வது போலவே., இறப்பு விகிதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இதன் மூலமா மக்கள் எதனால்? எவ்வாறு? இறக்கின்றனர் என்பது தொடர்பான விவரங்கள் சேகரித்து வைத்து கொள்ளப்படுகிறது.
இதன் மூலமாக மக்களின் இறப்பு விகிதம் கணக்கெடுக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் வருடத்திற்கு 10 ஆயிரம் பேர் பாம்பு கடியின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் தமிழகத்தை சார்ந்த ஆராய்ச்சியாளர் சக்திவேல் வையாபுரி தெரிவித்துள்ளார். மேலும்., கோயம்புத்தூரில் இருக்கும் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த சமயத்தில்., பாம்புக்கடியின் காரணமாக அதிகளவு உயிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்., பாம்பு கடித்த பின்னர் எந்த வகை பாம்பு? என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்., இதனை அறிந்தால் தகுந்த சிகிச்சை உடனடியாக தர இயலும் என்றும் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tamilnadu 10 thousand peoples died snake byte