தமிழகத்தில் அடுத்தடுத்து கூரையை பிரித்து கொட்டப்போகும் மழை.! வானிலை மையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல இடங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் சென்னைவாசிகள் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

வெப்ப சலனம் காரணமாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் 4 மாதங்களுக்கு பிறகு மழை பெய்தது. குறிப்பாக பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

நேற்று சென்னை சிறிய ஊட்டி போல் மாறி காலை முதல்  குளுகுளுவென வானிலை நிலை வந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். 

இதுமட்டுமல்லாது கடந்த சில வாரமாக வீசி வந்த வெப்பத்தின் தாக்கமானது படிப்படியாக குறைந்து நல்ல மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரமாக மக்கள் கடும் வெப்பத்தால் தவித்து வந்த நிலையில்., இந்த தகவலானது மக்களுக்கு சற்று மனநிறைவை அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilandu and pandichery have a rain for two days


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->