இலங்கையில் இருந்து காதலனை தேடி பண்ரூட்டி வந்த பெண்.. குவைத்தில் இருந்து விரைந்த தந்தைக்கு காத்திருந்த பெரும் சோகம்.!!
in srilanka girl love cudallore boy and now missing couple in tamilnadu
இலங்கை நாட்டில் உள்ள இரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சமக்கிபுரா பகுதியை சார்ந்தவர் ஜெயிஜுலாபுதீன். இவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் ரிஸ்வி பாத்திமா குப்தா (வயது 21). இவர் முகநூல் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு முகநூலின் மூலமாக, கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ரூட்டி அருகேயுள்ள வி.ஆண்டிகுப்பம் கிராமத்தை சார்ந்த முகமது முபாரக் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முகமது முபாரக் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், முகநூலின் மூலமாக இருவரும் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவர்களின் கருத்துக்களே பின்னாளில் காதல் தூதுவனமாக மாறியதை அடுத்து, இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். நேரில் சந்திக்காமல் இருவரும் முகநூல், வாஸ்டாப் என்று காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து காதலனை பார்க்க ஆசைப்பட்ட காதலி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். காதலியின் கோரிக்கையை ஏற்ற காதலனும் ஆவல் கொண்டு அன்பை பரிமாறிக்கொள்ளவே, கடந்த 26 ஆம் தேதியன்று சுற்றுலா விஷாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக பாத்திமா வருகை தந்துள்ளார். தனது காதலனிடம் விஷயத்தை முதலிலேயே தெரிவித்ததை அடுத்து, இருவரும் பண்ரூட்டிக்கு வந்துள்ளனர்.
இந்த விஷயம் பாத்திமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவசர அவசரமாக குவைத்தில் இருந்து ஜெயிஜுலாபுதீன் சென்னைக்கு வருகை தந்துள்ளார். பின்னர் முகமதுவின் முகவரியை பெற்றுக்கொண்டு பண்ரூட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேரிடையாக வி.ஆண்டிகுப்பம் பகுதிக்கு செல்கையில் காதல் ஜோடிகள் கிராமத்தில் இல்லை.. இதனையடுத்து இருவரின் புகைப்படம் மூலமாக காவல் துறையினர் காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in srilanka girl love cudallore boy and now missing couple in tamilnadu