பள்ளி மாணவியை நாடக காம காதலால் ஏமாற்றிய கொடூர ஆசிரியர்.! திருவில்லிபுத்தூரில் அரங்கேறிய கொடூரம்.!!
in sriilliputhur girl sexual harassment by teacher during study in school
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரை சார்ந்த 15 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சிறுமி பள்ளியில் நன்றாக படித்து வந்த நிலையில்., பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவியின் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பிற்க்காக நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பியுள்ளனர்.
மாணவியின் எதிர்கால படிப்பிற்கும் நல்ல மதிப்பெண்களுக்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்து., சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமியை சேர்த்துவிட்டுள்ளனர். இந்த நிலையில்., அந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியனாக பணியாற்றி வருபவனின் பெயர் பாலச்சந்திரன் (வயது 23).
இந்த நிலையில்., இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு படித்து வந்த மாணவிக்கு., அவரின் படிப்பு சுமைக்கு உதவியாக இருப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லையை வழங்கி வந்துள்ளான். சுமார் இரண்டு வருடங்கள் கடந்த பின்னர் சிறுமி பள்ளி படிப்பை முடித்துவிட்டு., கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்துகொண்டு இருந்துள்ளார்.
மாணவியின் மீது காம எண்ணத்தை கொண்ட காம கொடூர ஆசிரியர் கடந்த 18 ஆம் தேதியன்று திருவில்லிபுத்தூருக்கு வருகை தந்து மாணவியை சந்தித்து பேசியுள்ளார். இதுமட்டுமல்லாது மாணவியிடம் பேசி வந்த நாடக காதல் காம கொடூரன் திருவில்லிபுத்தூர் பகுதியில் இருக்கும் என்.சுந்தராஜபுரத்தில் உள்ள உறவினரின் தோட்டத்திற்கு அழைத்து சென்று தனிமையில் மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான்.
இந்த செயல்களை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவி கூறியதை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே., மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதை அறிந்து துடிதுடித்து போனார்கள். பின்னர் இது குறித்து திருவில்லிபுத்தூரில் இருக்கும் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in sriilliputhur girl sexual harassment by teacher during study in school