சகோதரியின் முறையற்ற உறவை கண்டு கொண்ட சகோதரன்.! ஆசையாக வளர்ந்த நீ செய்யும் செயலா இது., அரங்கேறிய சம்பவம்.!!
in sreeperumputhur brother killed her sister due to illegal affair
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மணிமங்கலம் பகுதியை சார்ந்தவர் பாலாஜி. இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சுமார் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
பாலாஜியின் உறவினரான கணபதி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில்., அடிக்கடி பாலாஜியின் இல்லத்திற்கு வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த நேரத்தில்., அடிக்கடி வந்து செல்லும் கணபதிக்கும் - வனிதாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளத்தொடர்பானது வனிதாவின் கணவர் பாலாஜிக்கு தெரியவரவே., இதனை அறிந்த தனது மனைவி வனிதாவை கண்டித்துள்ளார்.
கணவரின் கண்டிப்பை ஏற்க மறுத்த வனிதாவின் கள்ளக்காதல் மோகத்தால்., கணவரின் பேச்சுக்களை கேட்காமல் கள்ளக்காதலன் கணபதியுடன் உள்ளசமாக இருந்து வந்துள்ளார். மேலும்., இருவரும் அங்குள்ள பகுதியில் தனிமையில் சென்று கணவன் - மனைவியை போல சுற்றி திரிந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது கள்ளக்காதல் மோகம் அதிகரித்ததை தொடர்ந்து தனது குழந்தை மற்றும் கணவனை விட்டுவிட்டு கணபதியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். ஒன்றரை வயதுடைய குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து வந்த பாலாஜி., தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில்., இதனை அறிந்து கொண்ட பாலாஜி இருவரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இவர்களின் இல்லத்தை அறிந்த பாலாஜி மற்றும் வனிதாவின் சகோதரர் அதிகாலையில் வனிதாவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரையும் கண்ட வனிதா மற்றும் கணபதி தப்பி ஓட முயற்சித்த சமயத்தில்., இவர்களை மடக்கி பிடித்த இருவரும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் கணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க., வனிதா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.
இவர்கள் இருவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வந்தவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்த கணபதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர்., இது குறித்த விசாரணையை மேற்கொள்ள துவங்கினர்.
English Summary
in sreeperumputhur brother killed her sister due to illegal affair