மோட்டார் வாகனம் எதிரெதிரே மோதி பரிதாப பலியான வாலிபர்.! சிவகாசியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை அடுத்து திருத்தங்கல் பகுதியை சார்ந்தவர் முத்துராஜ். இவரது மகனின் பெயர் விக்னேஸ்வரன் (வயது 22). விக்னேஸ்வரன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். 

இவர் தீபஒளித் திருநாளை முன்னிட்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில்., தனது உறவினரின் இல்லத்திற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்றுள்ளார். 

இந்த சமயத்தில்., தனது உறவினரை சிவகாசி பேருந்து நிறுத்தத்தில் தன்னுடன் அலைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த சமயத்தில்., இவர் பயணித்த சாலையின் எதிர்புறத்தில் இருசக்கர வாகனம் வந்து கொண்டு இருந்துள்ளது. 

died, suicide attempt,

இவர்கள் இருவரின் வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில்., வாகனத்தில் இருந்த விக்னேஸ்வரன் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். 

இதனையடுத்து இவரை மீட்டு சிவகாசி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில்., மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர்.

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும்., சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In sivakasi student died in accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->