சிவகாசி 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை வழக்கில், அசாம் வாலிபரை தொடர்ந்து அடுத்த கைது?...!!
in sivakasi child sexual abuse and murder case police investigation
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் உள்ள கொங்கலாபுரம் எனும் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, விளையாடச் செல்வதாகக் பெற்றோர்களிடம் கூறிவிட்டு வெளியில் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின் நீண்ட நேரமாக சிறுமி வீடு திரும்பவில்லை, இதையடுத்து பெற்றோர் சிறுமியை பல இடத்தில் தேடிப் பார்த்துள்ளனர். சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மறுநாள் காலை 21 ஆம் தேதியன்று அங்குள்ள முட்புதரில் காயங்களுடன் சிறுமியின் உடல் ஆடைகள் கிழிந்து இருந்ததை பார்த்து அந்த வழியே சென்றவர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பான விசாரணையில், சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியான நிலையில், இப்பகுதியில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சார்ந்த 3 பேர் மற்றும் உள்ளூர் நபர்கள் 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் அசாம் மாநிலத்தை சார்ந்த மஜம் அலி என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 5 தனிப்படை அமைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போது அசாம் மாநில இளைஞரான மஜம் அலி கைது செய்யப்பட்டுள்ளான். இவனை நேற்று அங்குள்ள திருவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர். கைதான மஜம் அலியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது நேரடி பார்வையில் வைத்து விசாரணை செய்து வரும் நிலையில், மீதமுள்ள ஐவரிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in sivakasi child sexual abuse and murder case police investigation