முகநூல் காதல்.. காதலனின் உடல்நிலை அறிந்து காதலி எடுத்த அதிரடி முடிவு..!!
in sivakangai Facebook love successfully end with marriage
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பவித்ரா என்ற இளம்பெண்ணுக்கு பேஸ்புக் மூலமாக விக்னேஸ்வரன் என்ற நண்பர் கிடைத்த இருக்கின்றார். பேஸ்புக்கில் யாருமே தங்களுடைய முழு உருவ புகைப்படத்தை வைப்பதில்லை. அதுபோலவே விக்னேஸ்வரனும் வைக்கவில்லை.
விக்னேஸ்வரன் பி.சி.ஏ முடித்துவிட்டு ஆன்லைனில் பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றார். அன்றாடம் இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்துள்ளது.
விக்னேஸ்வரனின் உயரம் தெரியாமலேயே பவித்ரா அவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், விக்னேஸ்வரன் 4 அடி தான் உயரம் இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அவர்களுக்கிடையில் மனம் ஒத்துப் போய் விட்டதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பவித்ரா முடிவு எடுத்துள்ளார்.
இரு தரப்பு பெற்றோர்களிடமும் சம்மதம் கேட்க பவித்ராவின் பெற்றோர் இவர்களுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு அவர் தான் வேண்டும் என்று அடம் பிடித்து ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பவித்ரா விக்னேஸ்வரனுடன் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் இருவரும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அடைக்கலம் கேட்டு சென்றுள்ளனர். இதை அறிந்த பவித்ராவின் பெற்றோர்கள் தங்களுடன் பவித்ராவை வரும்படி அழைத்து இருக்கின்றனர். ஆனால் பவித்ரா மறுத்ததால் எங்களுக்கு இந்த பெண் வேண்டாம் என்று அங்கிருந்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in sivakangai Facebook love successfully end with marriage