இளம்பெண்ணிடம் அத்துமீறிய அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்..! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை.!!
in sivagangai sexual harassment lecturer arrest by police
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பாலியல் தொல்லைகள் பிரச்சனையானது பெண்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் பல கொடூர கொலைகளும் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியரின் மீது பெண் துப்புரவு பணியாளர் பாலியல் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவானது செய்யப்பட்டு உள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசியராக பணியாற்றி வருபவரின் பெயர் ஆறுமுகம். இத்துறையுடைய ஆய்வகத்தில் துப்புரவு பணியாளராக இளம்பெண்ணொருவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., கடந்த 13 ஆம் தேதியன்று பேராசிரியர் ஆறுமுகம் பாலியல் ரீதியாக இளம்பெண்ணிடம் அத்துமீறியதை அடுத்து இது தொடர்பாக பல்கலைக்ககத்தின் பதிவாளரிடம் புகார் அளிப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்., கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானதை அடுத்து கடந்த 9 ஆம் தேதியன்று அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பேராசிரியர் ஆறுமுகத்தின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in sivagangai sexual harassment lecturer arrest by police