தற்கொலை நாடகமாடிய பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடியான நூதன தண்டனை.!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதே இந்த பிரச்சனைகளை குறைக்க வழி வகுக்கும், அதேபோன்று சட்டதிட்டங்களையும் கடுமையாக்க வேண்டும்..பெண்கள் வெளியே செல்லும் போதும், பணிகளில் இருக்கும் போதும் பல விதமான முறையில் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உள்ளாகி அவர்களின் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்த பெண் கார்த்திகா, இவர் அங்கு உள்ள தனியார் நிறுவன ஷோரூமில் பணியாற்றி வரும் நிலையில், அங்குள்ள 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளனர்.

sexual harassment, sexual abuse,

இந்தப் பெண்ணிற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் மற்றும் கணவர் இருக்கும் நிலையில் இந்த துயரமானது அரங்கேறியுள்ளது. இதனை தாங்க முடியாத பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil

அந்த வீடியோவில் அந்த பெண் பேசியதாவது, எனது பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் உள்ள தனியார் ஷோரூமில் பணியாற்றி வருகிறேன், என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நால்வரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை வழங்குகின்றனர். என்னிடம் வந்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 அல்லது ரூ.2000 ஆ என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை கேட்டு உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு  ஒத்துழைக்கும் ஒரு பெண் ஒருவர் என்னிடம் வந்து, நீ தற்போது அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்‌. 

sexual harassment, sexual abuse,

இது மட்டுமல்லாது எனது கணவருக்கு தொடர்பு கொண்ட அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் என்னிடமிருந்து விலக்கம் அடைய துவங்குகிறார்.. இவர்களின் கொடூர எண்ணத்தாலும் பேச்சுக்களாலும் நான் கடுமையான மன வேதனை அடைந்துள்ளேன். அந்த அமுதா பெண் உண்மையிலேயே தவறான பழக்கம் உடையவராவார்.. 

இவர்கள் அனைவரும் சேர்ந்து எனது வாழ்க்கையை சீரழிக்க முடிவு செய்து இந்த செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் நான் கடுமையான மன வேதனையில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துக் கொள்கிறேன். 

hospital, hospital veranda

என்னை உங்களின் தாயாக சகோதரியாக தங்கையாக நினைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி எனது இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி கடைசியாக இடத்தை அருந்துகிறார். இந்த வீடியோ பதிவானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரியினர் பெண்ணை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., பெண் சோப்பையில் குடித்து நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

judgment, court order,

இந்த வழக்குதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கார்த்திகா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு மாத காலம் தற்கொலைக்கு முயற்சித்து வரும் நபர்களின் உயிருக்கான மதிப்பை அறிந்து கொண்டு., அவர்களுக்கு பாதுகாப்பை பற்றி விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sivagangai girl doing drama of suicide court order to different type of punishment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->