பிச்சைக்காரரின் மீது ஏறிய பேருந்து..! உடல்நசுங்கி பலியான பரிதாபம்.. வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!!
in sivagangai bus accident man died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பிற மாவட்டங்களுக்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்., இன்று காரைக்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தானது., சாலையை கடந்து சென்ற பிச்சைக்காரரின் மீது எதிர்பாராத விதமாக மோதி ஏறி சென்றது.
இந்த விபத்தில் பிச்சைக்காரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான நிலையில்., இது குறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., அவரின் உடமைகைளை சோதனை செய்ததில்., பிச்சையெடுத்த ரூ.15 ஆயிரம் பணம் இருந்துள்ளது.
மேலும்., இவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர்? என்பது தொடர்பான அடையாளம் கிடைக்காத நிலையில்., விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அருண்குமார் தாமாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in sivagangai bus accident man died