பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம்.. மக்கள் பாதிப்பு.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை.!!
In Sivaganga Fraud doctor arrest by police
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பல வருடமாக மருத்துவம் பார்த்து வருபவர் ராமசாமி (வயது 56). இவர் பல வருடமாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவரது மருத்துவத்தில் குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த விஷயம் குறித்த குறித்து வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரி சோதனை மேற்கொண்டுள்ளார்.
இதில் ராமசாமி மருத்துவம் படிக்கவில்லை என்பதும், பத்தாம் வகுப்பு மட்டும் பயின்று இருந்த ராமசாமி, பல வருடமாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராமசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருத்துவ பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In Sivaganga Fraud doctor arrest by police