காதலனை தாக்கி காதலியை கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த விவகாரம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
in selam vaalapadi sexual harassment case police arrest culprit
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகேயுள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்தவர் தினேஷ் (வயது 25). இவர் அங்குள்ள தனியார் நெகிழி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் பிரேமா என்ற 32 வயதுடைய பெண்மணியும் பணியாற்றி வந்துள்ளார். தினேஷிற்கும் - பிரேமாவிற்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு இருந்துள்ளது.
இந்த சமயத்தில்., இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானதை அடுத்து., இருவரும் சேர்ந்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது அடிக்கடி நிறுவனத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு பல இடங்களில் சுற்றித்திரிந்தும்., உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர். இந்த தருணத்தில்., கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து நெய்யர்மலை காட்டுப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் திட்டப்படி., இவர்களின் இரு சக்கர வாகனத்தில் நெய்யர்மலை காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில்., அடர்ந்த காட்டுப்பகுதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு., காட்டுப்பகுதிக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த சமயத்தில்., வாகனம் தனிமையில் நிற்பதை கவனித்த ஆறு பேர் கொண்ட கும்பலானது., இவர்களின் வருகைக்காக காத்திருந்துள்ளது.
உல்லாசமாக இருந்த ஜோடி வாகனத்திற்கு வரும் வழியில் இடைமறித்த கும்பல்., தினேஷை அடித்து நொறுக்கி., பிரேமாவை கடத்தி சென்று., கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கியுள்ளான்கள். இவன்களது கொடூரத்தில் இருந்து தப்பிக்க வழிதெரியாமல்., இறுதியில் பிரேமா மயக்கமடைந்துள்ளார். தினேஷ் இரத்த வெள்ளத்துடன் சாலைக்கு வந்து., பயணம் செய்து கொண்டு இருந்தவர்களை இடைமறித்து விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காம கும்பலை விரட்டிய நிலையில்., மயக்கமடைந்து இருந்த பிரேமாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., பிரேமாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய தனிப்படை அமைத்து ஆறுபேரை தேடி வந்த நிலையில்., வாழப்பாடி பகுதியை சார்ந்த அழகேசன்., சேதுபதி., வெங்கடாசலம்., கலையரசன்., கோகுல்., மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்., இவர்களில் அனைவரும் இளம்வயதுள்ள இளைஞர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam vaalapadi sexual harassment case police arrest culprit