மனைவியிடம் சில்மிஷம்.. ரவை ரவையாக உரித்து அனுப்பி வைத்த கணவன்.. முழு விசாரணையில் அதிர்ந்துபோன காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 48). இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், திருமணம் முடிந்து 38 வயதுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்திற்க்காக மின்சாரத்துறை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பழனிச்சாமி தினமும் பணிக்காக சென்று திரும்பி வருகிறார். 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமையில் மாலை நேரத்தில் அலுவலகத்திற்கு சென்ற நபர், தன்னை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக கூறி தாக்கினர். நான் மின்வாரிய பணியாளர் என்று கூறியும் நம்பாது என்னை அடித்து தாகிவிட்டனர். இதனால் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சக ஊழியர்கள் மின்வாரிய தலைவர் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இவரது நண்பர் ஒருவர் இது குறித்த விஷயத்தை புகைப்படத்துடன் முகநூலில் பதிவு செய்துள்ளார். 

இதனால் காவல் துறையினருக்கு எதிராக கருத்துக்கள் பரவியதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, காவல் துறையினர் குறிப்பிட்ட இந்தியன் வங்கியின் முன்பு வைத்து யாரையும் தாக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகியிருந்த காவல் துறையினர், கணிக்கணிப்பு காமிராவை சோதனை செய்ததில், பழனிச்சாமி கூறியது போல காட்சிகள் இல்லாததை அடுத்து பழனிசாமியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.

மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த திருமணம் முடிந்த இளம்பெண்ணை, பழனிச்சாமி பனி நிரந்தரம் செய்து தருவதாக கூறி ஏமாற்றி நெருங்கி பழகி வந்துள்ளான். இந்த பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, கணவன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பெண் பழனிசாமியுடன் கொண்ட பழக்கத்தை நிறுத்தவே, பழனிச்சாமி தனது பழக்கத்தை கைவிடாது பெண்ணை தொல்லை செய்து வந்துள்ளான். இந்த விஷயத்தை பெண் தனது கணவரிடம் தெரிவிக்கவே, சம்பவத்தன்று பெண் கணவரின் திட்டப்படி பழனிசாமியை பெண்ணின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பெண் அழைத்த உற்சாகத்தில் காமுகன் பழனிச்சாமி செல்லவே, வீட்டிற்குள் சென்றதும் இளம்பெண் கதவை பூட்டி தாழிட்டுள்ளார். உள்ளே இருந்த பெண்ணின் கணவன் பழனிசாமியை சரமாரியாக அடித்து நொறுக்கவே, உடல் முழுவதும் தடுப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்கவே காவல் துறையினர் தன்னை அடித்ததாக நாடகம் ஆடி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பான விபரத்தை தெரிவிக்கவே, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பழனிசாமியை இடைநீக்கம் செய்துள்ளனர். இந்த தகவலை முகநூலில் பதிவு செய்த மின்வாரிய ஊழியரும் மன்னிப்பை கேட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam sexual torture man attacked by husband


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->