மனைவியின் கள்ளக்காதலனை உயிருடன் காருக்குள் வைத்து கொளுத்திய கணவன்.! ஊத்தாங்கரையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு கோவிலூர் பகுதியை சார்ந்தவர் மகாமுனி. இவரது மகனின் பெயர் சிவா. இவர் உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில்., தனது இல்லத்தாரிடம் தோப்புப்பட்டியில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்கு சென்ற மகன் மீண்டும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில்., நேற்று அதிகாலையின் போது வேலாயுதம்பாளையம் - செங்குறிச்சி சாலையில் இருக்கும் ஊத்தாங்கரை பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதை அங்குள்ள மக்கள் கண்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

கார் முழுவதுமாக எறிந்த நிலையில் காரில் இருந்த வண்டியின் எண்ணை வைத்து செய்த சோதனையில் கார் சிவா என்ற நபருக்கு சொந்தம் என்பதும்., காரில் இருந்த சிவா எறிந்த நிலையில் பிணமாக இருக்கிறார் என்பதையும் அறிந்துள்ளனர். இதனையடுத்து சிவாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்னர். 

Tamil online news Today News in Tamil

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில்., கள்ளக்காதல் பிரச்சனைக்காக சிவா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சிவாவுக்கும் - கோவிலூர் பகுதியை சார்ந்த விவேக் என்பவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ள நிலையில்., அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இதனை அறிந்த விவேக் இரவரையும் எச்சரித்த நிலையில்., கள்ளகாதல் உறவை கைவிட மறுத்துள்ளனர். இதனையடுத்து விவேக் தனது நண்பர்களுடன் சிவாவை கொலை செய்ய திட்டமிட்டு., ஊத்தாங்கரை பகுதிக்கு வரவழைத்து மனைவியின் கள்ளகாதலனனை உயிருடன் காருக்குள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக நால்வரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam oothangarai car burn murder case investigation ended by illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->