சேலத்தில்., சொந்த மகளையே வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த கொடூர தந்தை.! கைதான தந்தையின் பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சார்ந்தவர் சரவணன். இவர் அங்குள்ள கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு ஒரு சமயத்தில் அதிகமாகவே., இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்., இவர்களின் மூத்த மகள் தந்தையுடனும்., இளைய மகள் தாயுடன் வசித்து வருகிறார். 

இந்த நேரத்தில் மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்த சரவணன்., சம்பவத்தன்று மது போதையில் இல்லத்திற்கு வருகை தந்து., சொந்த மகளையே வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். 

தனக்கு நடந்த அநீதியை தனது தாயாரிடம் மூத்த மகள் கண்ணீருடன் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார்., விஷயம் குறித்து அங்குள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., இந்த தகவலை அறிந்த சரவணன் தலைமறைவாகினார். இவரை காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் முதல் தீவிரமாக தேடி வந்து கொண்டு இருந்தனர். 

இந்த சூழ்நிலையில்., தேடப்பட்டு வந்த சரவணன் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பேருந்து நிலையத்தில் இருந்த சரவணனை கைது செய்தனர். 

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில்., சொந்த மகளையே மது போதையில் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததும்., இவர்கள் இருவருக்கும் குழந்தை ஒன்று உள்ளதும் தெரியவந்தது. இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam girl rapped by her father when drink hardly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->