ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மாமனார்.. சேலத்தில் பேரதிர்ச்சி.. பரபரப்பு வாக்குமூலம்.!!
in selam girl murder due to sexual torture
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மபட்டி அருகேயுள்ள உலிபுரம் நரிகரடு பகுதியை சார்ந்தவர் அறிவழகன் (வயது 45). இவர் ஆத்தூர் அருகேயுள்ள சொக்கநாதபுரம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அமுதா (வயது 40).
நேற்று அறிவழகன் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் அமுதா தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில், அறிவழகனின் தந்தை பழனி (வயது 63) வருகை தரவே, அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி, அமுதாவை கோடரியால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அலறிய அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில், அமுதா இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருமகளை கோடரியால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணை வாக்குமூலத்தில், உலிபுரத்தில் வசித்து வரும் எனனுடன், எனது மகனும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனது மருமகளான அமுதாவை எப்படியாவது அடைய வேண்டும் என்று நீண்ட வருடமாக துடித்து வந்தேன். அவரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
இந்த விசயத்திற்கு அமுதா மறுப்பு தெரிவித்தார். இந்த நேரத்தில், அவருக்கு மற்றொரு நபருடன் பழக்கம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, நேற்று இல்லத்திற்கு சென்று பார்த்தேன். எனது மருமகள் மட்டும் இருந்ததால், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன்.
அவர் முடியாது என்று மறுப்பு தெரிவிக்கவே, சத்தம் போடவும் முயற்சி செய்தார். இதனையடுத்து அங்கிருந்த கோடரியை எடுத்து அமுதாவை வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அமுதாவுக்கு 19 வயதுடைய மகனும், 16 வயதுடைய மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam girl murder due to sexual torture