இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொடூர கொலை... சேலத்தில் பேரதிர்ச்சி.. பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பகுட்டை கிராமத்தின் பூசாரிக்கட்டுவளவு பகுதியை சார்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 44). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் பீனா (வயது 31). பீனா கேரளாவை பூர்வீகமாக கொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து முடித்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு பெண் குழந்தைகளும் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். பீனாவுடைய கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், தனது குழந்தைகளுடன் பீனா மாமியாரின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அங்குள்ள சீரகப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையிலும் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நேரத்தில், நேற்று முன்தினத்தின் போது பீனா அங்குள்ள ஏரி பகுதியில் கல்லால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க அனுப்பி வைத்தனர். 

இதன் பின்னர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், முதற்கட்ட விசாரணையில் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகித்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அப்பகுதியை சார்ந்த வாலிபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam girl gang rapped and murder police arrest and investigate three culprits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->