காதலருடன் பைக்கில் சென்ற மாணவி உடல்நசுங்கி பலியான பரிதாபம்.. காதலர் தின கண்ணீர் தகவல்கள்.. சேலத்தில் பெரும் சோகம்..!!
in selam girl died travelling with lover
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு ஏற்காடு கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் ரவிணாய்குமார். இவரது மனைவியின் பெயர் துளசி. இவர்களின் மகளின் பெயர் ஆர்த்தி (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி 2 ஆம் வருடம் பயின்று வருகிறார்.
திருவண்ணாமலை பகுதியை சார்ந்தவர் செல்வம். இவரது மகன் பெயர் அசோக் (வயது 25). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று ஆர்த்திக்கு பிறந்தநாள். இவர்களின் பிறந்தநாள் மற்றும் காதலர்தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு, பெங்களூரில் இதற்கான பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சேலத்தில் இருந்து பெங்களூருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள பூசாரிப்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனம் இவர்களின் மீது மோதி, இருவருமே வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன. இந்த சமயத்தில், பின்னால் வந்து கொண்டு இருந்த டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
அசோக் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், ஆர்த்தியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், ஆர்த்தி பெங்களூரில் தங்கியிருந்து தனது பள்ளிப்படிப்பினை முடித்துள்ளார். அசோக்கின் கும்பத்தினரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் பகுதியில் வைத்து வந்துள்ளார்.
இந்த சமயத்திலேயே இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. பெங்களூர் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் (சிவில்) பட்டம் பயின்று கொண்டு இருக்கும் அசோக், பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதன்மூலம் கிடைத்த வருவாயை வைத்து ரூ.3 இலட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஆர்த்தியின் பிறந்தநாள் மற்றும் காதலர் தினத்தை கொண்டாட புதிய இருசக்கர வாகனத்தில் பெங்களூருக்கு புறப்பட்டதும், தனது காதலிக்கு இரு சக்கர வாகனத்தை இயக்க கற்றுக்கொடுத்த போது, இவர்களின் வாகனம் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி இருவரும் கீழே விழுந்துள்ளார். ஆர்த்தி சாலிக்கு நடுவே விழுந்த நிலையில், இந்த விபத்தை கண்டு லாரி ஓட்டுநர் லாரியை திருப்பியுள்ளார்.
இருப்பினும் லாரியின் பின்புற சக்கரத்தில் ஆர்த்தியின் உடல் மற்றும் தலை சிக்கியதில், சம்பவ இடத்திலேயே ஆர்த்தி பரிதாபமாக பலியாகியுள்ளார். தனது காதலி துடிதுடித்து பலியாவதை அசோக் தன் கண்ணெதிரே பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். காவல் துறையினர் ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam girl died travelling with lover