இயற்கை உபாதையை கழிக்க சென்ற பெண்ணை கற்பழிக்க முயன்ற காம கொடூரன்.! சேலத்தில் அரங்கேறிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை அடுத்துள்ள கமலாபுரம் பகுதியை சார்ந்த ஊராட்சி இடங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்., சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வந்தனர். இந்த சமயத்தில்., பணிக்கு வந்திருந்த 40 வயதுடைய பெண்ணொருவருக்கு இயற்கை உபாதை ஏற்படவே., உபாதையை கழிப்பதற்காக மறைவான இடத்திற்கு சென்றுள்ளார். 

அந்த சமயத்தில்., அந்த இடத்தில் மறைவாக இருந்த கமலாபுரம் காலனியை சார்ந்த காம கொடூரன்., தனது ஆடைகளை கழற்றி., பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து., பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இவனின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் பயத்தால் கூச்சலிடவே., இவரது கூச்சலை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக ஓடி சென்றனர். 

பணியாற்றிய அனைவரும் வருவதை அறிந்த காம கொடூரன் சம்பவ இடத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கவே., அவனை துரத்தி சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளான். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அனைவரும்., அங்கிருக்கும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த துவங்கினர். இது குறித்த தகவலும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில்., பட்டப்பகலில் பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்கும் செயலும்., மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசும் சம்பவமும் அரங்கேறியுள்ளதாகவும்., பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் தொடர்கதையாகிஉள்ளதாகவும் தகுந்த நடவடிக்கையை காவல் துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam culprit try to rap sexual harassment police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->