சீன பெண்ணிற்கும் - சேலம் பையனிற்கும் தமிழ் முறைப்படி மாங்கல்யம் தந்துனானே...!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி அருகில் இருக்கும் மணக்காடு அன்பு நகர் பகுதியைச் சார்ந்தவர் பரசுராமன். இவரது மகனின் பெயர் அருண்பிரசாத் (வயது 34). 

அருண்பிரசாத் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கும் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச் சார்ந்த கிறிஸ்டல் ஜியாங் என்ற 31 வயது பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் அவர்களுக்குள் நட்பாக மாறவே., இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில்., இது காதலாக மாறியுள்ளது. மேலும்., இவர்கள் அங்கு பகுதி நேரமாக வேலை பார்க்கும் போது ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியுள்ளது. காதலிக்க தொடங்கிய அருண்பிரசாத் முதலில் காதலை தெரிவித்த நிலையில்., கிறிஸ்டல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

marriage, திருமணம்,

பின்னர் இவர்களுக்கு இடையே இருந்த நட்பானது காதலாக மாறி., ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் அருண்பிரசாத் தெரிவித்ததையடுத்து., அவர்களும் சீன பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி சேலத்திலுள்ள தேவாலயத்திலும்., இந்து முறைப்படி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண வரவேற்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சீனாவில் நடப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam boy getting marriage china girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->