சரக்கு பாட்டிலில் செத்து மிதந்த தவளை.. பதறிப்போன குடிமகன்.. வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி ஈசானிய தெரு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில், அங்குள்ள தென்பாதி பகுதியை சார்ந்த நபர் நேற்றுமுன்தினம் ரம் வகை மதுபானத்தை வாங்கியுள்ளார். 

இந்த மதுபானத்தை வாங்கிய குஷியில் வேகமாக அங்குள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று, பாட்டிலை வேக வேகமாக திறந்த பாதி மதுவை கப்பில் ஊற்றி, மீதி மதுவை வைத்திருக்க மதுபாட்டிலை மூடியுள்ளார். 

பாட்டிலை மூடும் போது மதுபாட்டிலில் எதோ என்று இருப்பதாக கவனித்துள்ளார். பாட்டிலை சரியாக நோக்குகையில் தவளை ஒன்று மிதந்துகொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நபர், கப்பில் இருந்த மதுவை கீழே ஊற்றியுள்ளார். 

பின்னர் மதுபான கடைக்கு விரைந்து சென்று, இது குறித்து தெரிவிக்கவே, மதுபான கடை ஊழியர்கள் தகவலை வெளியே தெரிவிக்காமல், தவளையுடன் இருந்த மதுபானத்தை வாங்கிவிட்டு, புதிய மதுபானத்தை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மது பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Seerkazhi Tasmac liquor bottle inside died frog


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->