திருமண விருந்திற்கு சென்ற போது நேர்ந்த சோகம்.. 4 நண்பர்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.!!
in Ranipet accident friends died when going to marriage reception function
தமிழகத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேவிஷாரம் அருகேயுள்ள ஷாஜிப்பேட்டை பகுதியை சார்ந்தவர் நிகால். இவரது சகோதரிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்க்காக இவர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் தனது நண்பர்களான ஆரிப் (வயது 20). சையத் (வயது 20), கரிமுல்லா (வயது 19) துபெயில் அகமது (வயது 19), கலீம் (வயது 20), முபாரக் (வயது 20), இதயத்துல்லா (வயது 20), ஆரிப் (வயது 18), சையத் (வயது 21), நியாஸ் (வயது 18) மற்றும் ஜபருல்லா (வயது 19) ஆகியோருடன் பஞ்சபாண்டவர் மலைக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
ஆட்டோவினை ஆரிப் இயக்கிய நிலையில், நிக்கல் மட்டும் தனியாக சென்றுள்ளார். இந்த நிலையில், ஆட்டோ மேல்விஷயம் பகுதியில் வந்த நேரத்தில் திடீரென நிலைதடுமாறி தோல் தொழிற்சாலை சுவரில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கிய நிலையில், இடிபாடில் சிக்கியிருந்த சையத், கரிமுல்லா, கலீம், துபெயில் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும், முபாரக், இதயதுல்லா, சையத், நியாஸ் மற்றும் ஜபருல்லா உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள வாலாஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Ranipet accident friends died when going to marriage reception function