20 வயதான புதுமண பெண், பிரசவத்தில் குழந்தையையும் சேர்ந்து விண்ணுலகிற்கு அழைத்து சென்ற சோகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மடை பகுதியை சார்ந்தவர் முருகன். சத்திரங்குடி அருகேயுள்ள அரியக்குடி பகுதியை சார்ந்தவர் கீர்த்திகா (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த சமயத்தில் கீர்த்திகா கர்ப்பமாகவே., நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகாவிற்கு நேற்று மதியத்தின் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முருகன் தனது உறவினர்கள் மூலமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்து வலியால் துடித்த கீர்த்திகாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்த நிலையில்., திடீரென கீர்த்திகாவின் உடலநலம் குறைந்து கீர்த்திகா மற்றும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

pregnant, pregnant lady,

இந்த செய்தியை அறிந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., கீர்த்திகாவின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., கீர்த்திகாவின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் என்று உறவினர்கள் கருதினர். 

இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Ramanathapuram pregnant woman died with baby in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->