உதவி ஆய்வாளரை தாக்கிய புள்ளிங்கோ..! காலைக்கடனை கழிக்க சென்று காவாயில் வழுக்கி விழுந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சப்புள்ளி பகுதியில் இருக்கும் பேக்கரியில் கடந்த 10 ஆம் தேதியன்று இரவு உதவி ஆய்வாளரான ஜெயபாண்டி கொலைவெறித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த காவல் அதிகாரி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்., ஜெயபாண்டி தாக்கப்பட்ட கண்காணிப்பு காட்சிகள் அங்குள்ள காமிராவில் பதிவாகியுள்ளது. 

இதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உச்சிப்புள்ளி பகுதியை சார்ந்த வாலிபர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டு ரூ.5 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து உச்சிப்புள்ளி பகுதியை சார்ந்த நாகச்சி தெரு கணேசனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட நேரத்தில், காலைக்கடனை கழிக்க கழிவறைக்கு சென்று வழுக்கி விழுந்தார். 

பின்னர் காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். கழிவறையில் வழுக்கி விழுந்ததில் இரண்டு கால்கள் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு பின்னர் இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ramanathapuram police attack pullingo arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->