விபத்தில் மூளைச்சாவு அடைந்த பரமக்குடி இளைஞர்.. பெற்றோர்களின் உதவியால் உயிர்வாழும் நெகிழ்ச்சி..!!
in ramanathapuram paramakudi youngster organ donate
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே இருக்கும் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் சரத்குமார். இவர் சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் பணி நிறைவு பெற்றதும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த வேலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இந்த விபத்து குறித்து சரத்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒத்துழைத்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்களின் அனுமதியுடன் அவரது கண்கள், இதயம், கணையம் உள்ளிட்ட 8 உறுப்புக்கள் தனமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நண்பனின் இறப்பை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகனத்தில் செல்லும் நபர்கள் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in ramanathapuram paramakudi youngster organ donate