குழந்தையில்லாத காரணத்தால் கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்..!! நாட்டில் இப்படியுமா நடக்கும்?..!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுவலசை தாவுக்காடு பகுதியை சார்ந்தவர் ராமசாமி. இவருக்கும் அங்குள்ள அத்தியூர் பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும்.. குழந்தைப்பேறு இல்லாததன் காரணமாக இருவருக்குள்ளும் சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்ற பஞ்சவர்ணம்., தனது கணவருடன் வருவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில்., உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து கணவன் வீட்டிற்கு பஞ்சவர்ணத்தை அனுப்பி வைத்துள்ளனர். உறவினரின் சமாதானத்திற்கு பின்னரும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. 

கணவன் மனைவி சண்டை, husband wife fight, husband wife problem,

இந்த சண்டைக்கு பின்னர் ராமசாமியின் சகோதரரான கணேசன் என்பவர்., தனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் குடிவைத்துள்ளார். இந்த வீட்டிலும் இவர்கள் இருவரும் தங்களின் சண்டையை விடாமல் சண்டையிட்டு வந்த நிலையில்., கணவரை கொலை செய்ய பஞ்சவர்ணம் திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ராமசாமியை உணவில் விஷம் வைத்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

தொடர்ந்து பல மிரட்டல் விடுத்து வந்த நிலையில்., நேற்று தனது கணவருக்கு ஆசையாக சமைப்பது போல தக்காளி சாதம், முட்டை பொரியல் மற்றும் ரசம் சமைத்து கொடுத்து., அதில் சமைக்கும் போதே எலி மருந்தும் கலந்துள்ளார். இந்த விஷம் கலந்த உணவை கணவனை குழந்தை போல மடியில் படுக்க வைத்து ஊட்டிவிட்டு குழந்தை போலவே., கொஞ்சி ஊட்டிவிட்டுள்ளார். 

crime, கிரைம்,

உணவில் உள்ள விஷத்தை அறியாத ராமசாமியும் உணவை சாப்பிடவே., ராமசாமி உணவை சாப்பிட்டதும் பக்கத்துவீட்டிற்கு சென்றுள்ளார். கணேசனின் இல்லத்திற்கு சென்ற பஞ்சவர்ணம் விஷயத்தை கூறி., தங்களின் சகோதரர் இன்னும் சில நொடியில் உயிரிழப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ramanathapuram girl try to kill husband due to no baby problem 18 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->