சிறுவயது முதல் முதியவர்களாலேயே அதிகளவு வன்கொடுமைகள் நடக்கிறது..! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளியான பேரதிர்ச்சி உண்மை..!!
in ramanathapuram girl tell about privately sexual harassment issue increased old man
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்டத்தின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்ஸோ சட்டத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில்., இராமநாதபுரம் மாவட்ட சட்டக்கல்லூரி மாணவிகள் சுமார் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு., போக்ஸோ குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் மூலமாக சுமார் 14 மகளீர் பள்ளியில் பயின்று வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு., இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மற்றும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தைரியமாக வெளிக்கொணரும் தன்மை குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிழச்சியின் முடிவின் போது மனைவிகளுக்கு போக்ஸோ சட்டத்தின் சந்தேகம் மற்றும் மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துகளை ரகசியமாக கூற., ரகசிய புகார் பேட்டியும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெட்டியில் இடப்படும் புகார்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியதை கேட்ட மாணவிகள் முதலில் தயக்கத்தை காட்டினாலும்., பின்னர் மனதளவில் தயாராகி தங்களுக்கு நடந்த அநீதியை எழுதியுள்ளனர்.
இந்த புகார் பெட்டியில் இருந்த கடிதங்களை கண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக., தங்களின் சிறுவயது முதலாகவே பாலியல் ரீதியான தொந்தரவை அனுபவித்து வந்ததும்., உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என்று அனைவராலும் பாலியல் தொல்லை அனுபவித்தும் தெரியவந்தது. மேலும்., முதியவர்கள் மூலமாக பெரும்பாலான பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமும் தெரியவந்தது.
இதனையடுத்து ரகசிய பெட்டியில் இருக்கும் கருத்துகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும்., இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வெளிப்படையாக விசாரிக்காமல்., இரகசியத்துடன் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காம கொடூரன்களை இரகசிய முறையில் கண்காணித்து வருவோம் என்றும்., இதன் மூலம் குற்ற பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in ramanathapuram girl tell about privately sexual harassment issue increased old man