தாயும் - சேயும் உயிரிழந்த சோகத்தில் அதிர்ச்சி திருப்பம்..! வெளியான பகீர் தகவல்.!!
in ramanathapuram girl and baby died in hospital irresponsible doctor treatment
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மடை பகுதியை சார்ந்தவர் முருகன். சத்திரங்குடி அருகேயுள்ள அரியக்குடி பகுதியை சார்ந்தவர் கீர்த்திகா (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த சமயத்தில் கீர்த்திகா கர்ப்பமாகவே., நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகாவிற்கு நேற்று மதியத்தின் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முருகன் தனது உறவினர்கள் மூலமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து வலியால் துடித்த கீர்த்திகாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்த நிலையில்., திடீரென கீர்த்திகாவின் உடலநலம் குறைந்து கீர்த்திகா மற்றும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., கீர்த்திகாவின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., கீர்த்திகாவின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் என்று உறவினர்கள் கருதினர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த விஷயம் தொடர்பாக தற்போது வெளியான தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில்., இங்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகள் ஏதும் வழங்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றசாட்டு முன் வைக்கின்றனர்.
மேலும்., இங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு சொந்தமாக மருத்துவமனை உள்ளதாகவும்., அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை இடைத்தரகர்கள் மூலமாக மூளைச்சலவை செய்து தங்களது மருத்துவமனையில் அனுமதித்து பணவேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில்., கடந்த வெள்ளிக்கிழமை பிரசவத்திற்க்காக கீர்த்திகா அனுமதியாகியுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் கீர்த்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில்., சிறுது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும்., அடுத்த சில நிமிடத்திலேயே கீர்த்திகாவிற்கு வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்., மருத்வவர்கள் சிகிச்சையளிக்காமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை பதிவு செய்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in ramanathapuram girl and baby died in hospital irresponsible doctor treatment