இராசபாளையம் இளைஞருக்கு கரோனா?.... மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கரோனா பரவுவதை தடுப்பதற்கு மாநில அரசானது பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதிகளவு மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த மதுரை மத்திய அரசு அதிகாரிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. 

இதனையடுத்து இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதனைப்போல திண்டுக்கல்லை சார்ந்த இரட்டையர்களை கரோனா அறிகுறியுடன் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களின் இரத்த மாதிரிகள் கரோனா ஆய்விற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் இவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் பகுதியை சார்ந்த வாலிபர் டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் ஊருக்கு திரும்பியுள்ளார். இவர் இராசபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சல் குறையவில்லை.

இதனையடுத்து கரோனா குறித்த பாதிப்பு இருப்பதாக மதுரை மருத்துவமனைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவரிடம் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு தேனி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின் முடிவிலேயே இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டாரா? பிற வைரஸ் காய்ச்சலா? என்பது தெரியவரும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Rajapalayam youngster have symptoms of corona virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->