தீராத நோயால் அவதியுற்று வந்த காவல்துறை அதிகாரி.. மனஉளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!! இராசபாளையத்தில் பெரும் சோகம்.!!
in Rajapalayam police attempt suicide due to long time skin infection
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கூனங்குளம் பகுதியை சார்ந்தவர் காளிராஜ் (வயது 28). இவர் கடந்த 2013 ஆம் வருடத்தில் காவல் அதிகாரியாக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இவர் தற்போது இராசபாளையத்தில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில், நேற்றிரவு நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் காளிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தளவாய்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை இராசபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காளிராஜ் சிறுவயதில் இருந்து தோல் வியாதியால் அவதியுற்று வந்தார் என்றும், இதனால் சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் இருந்துள்ளது.
இதனால் மனவிரக்தியடைந்த காவல் அதிகாரி மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், கடுமையான மதுபழக்கத்தை கையில் எடுத்து கடந்த இரண்டு மாதமாக சரிவர பணிக்கு வராமல் இருந்த காளிராஜ், மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Rajapalayam police attempt suicide due to long time skin infection