மனைவியை நண்பர்களின் உதவியுடன் கொலை செய்த கொடூர கணவன்... 3 வருட விசாரணைக்கு பின் மகளை எலும்பு கூடாக கண்ட பெற்றோர்கள்.. பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே இருக்கும் பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சார்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ஆலங்குடி அண்ணா நகர் பகுதியைச் சார்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் முடிந்தது. 

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2017 ஆம் வருடத்தில் சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இது தொடர்பாக சரண்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் முதல் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், சரண்யா காணாமல் போன நேரத்தில் சரண்யாவுடைய கணவரின் அலைபேசி விவரத்தை சேகரித்து உள்ளனர். மேலும், ராஜாவின் அலைபேசி எண்ணையும் அறிந்து விவரம் சேகரித்துள்ளனர். இந்த சமயத்தில் சரண்யாவுடைய கணவரின் அலைபேசியில் இருந்து வெளிநாடுகளுக்கு அழைப்பு சென்ற நிலையில், அது ரகு என்கிற ரகுவரன் என்பவரின் அலைபேசி எண் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ரகுவை திருச்சிக்கு வரவழைத்து அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், சரண்யாவின் கணவரை ராஜா காவல்துறையினர் மீண்டும் அழைத்து விசாரணை செய்துள்ளனர். 

இந்த விசாரணையில், மனைவி சரண்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்ததும், இதற்காக ராஜா தனது நண்பர்களான ரகு, பாட்சா, சிவப்பிரகாசம் ஆகிய மூன்று பேரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து அவர்களின் திட்டப்படி, சரண்யா கொலை செய்யப்பட்டு அங்குள்ள கிராமத்தில் இருக்கும் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர் சரண்யாவின் உடலை ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் மீட்டு உள்ளனர். 

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜா, பாஷா, ரகு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவப்பிரகாசம் தலைமறைவாக உள்ள நிலையில், அவரின் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai wife murder by friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->