மகனின் துக்கம் நெஞ்சை அடைக்க., தந்தைக்கும் நேர்ந்த சோகம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகேயுள்ள அறையப்பட்டு பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம் (வயது 73). இவர் கூலிக்கு பணியாற்றும் விவசாயியாக இருந்து வரும் நிலையில்., இவரது மகனின் பெயர் ராஜாங்கம் (வயது 47). 

இராஜாங்கத்திற்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில்., அவர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., அங்குள்ள வார சந்தையில் காய்கறி வியாபாரம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். 

died, killed,

இந்த நிலையில்., ராஜாங்கத்திற்கு கடுமையான வயிற்று வலி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அங்குள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது உடல் இவரின் ஊருக்கு கொண்டு வந்த தருணத்தில்., மகனின் இறப்பு செய்தியை கேட்டு இருந்த தந்தை ஆறுமுகம் பரிதாபமாக மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். இவர்களின் குடும்பத்தாருக்கு அடுத்தடுத்த சோகம் ஏற்பட்டதால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai two person died simultaneously


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->