7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவனுக்கு புதுக்கோட்டை நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனைகளில் நம்மை பெரும் துயருக்கு மத்தியில் ஆளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் ஆகும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கட்டுக்குள் வைப்பதற்கு நமது நாட்டின் சட்டங்கள் கடுமையாக மாறினால் மட்டுமே இது போன்ற குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்ற இயலும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தை சார்ந்தவன் அஸ்ரப் அலி (வயது 68). இவனது வீட்டிற்கு அருகே 7 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்தில்., மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுமட்டுமல்லாது சிறுமியிடம் இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான். 

sexual harassment, sexual abuse, பாலியல் வன்கொடுமை,

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அஸ்ரப் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு விசாரணையானது அங்குள்ள புதுக்கோட்டை மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கு விசாரணையானது இன்று மீண்டும் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அஸ்ரப் அலிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும்., பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai girl rapped case court order jail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->