நீண்ட நேரம் அலைபேசியில் பேசி தற்கொலை முடிவு செய்த தோழிகள்.! காவல் துறையினர் விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in puthukottai girl friend attempt suicide police investigation going on
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரை சார்ந்தவர் பழனியப்பன். இவரது மகளின் பெயர் நதியா (வயது 19). இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் கல்வி கூடத்தில் (ITI) பயின்று வருகிறார்.
இந்த நிலையில்., இவர் கடந்த 10 ம் தேதியன்று எலி மருந்தை உட்கொண்டு வீட்டிலேயே மயங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்., இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்த பின்னர்., மருத்துவர்கள் அங்குள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறி ஆலோசனை செய்துள்ளனர். இவர்களின் ஆலோசனை படி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வைத்த நிலையில்., சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நேரத்தில்., அதே பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் அங்குள்ள கரும்பிரான்கோட்டையை சார்ந்த கருப்பையாவின் மகளின் பெயர் சண்முக ப்ரியா (வயது 18)., இவருக்கும் அதே தேதியில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரையும் அங்குள்ள புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர்., மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்., நதியாவின் தந்தை தனது மகள் வயிற்று வலியால் இறந்தததாக தெரிவித்துள்ளார். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., இவர்கள் இருவரும் தோழிகள் என்ற நிலையில்., தற்கொலைக்கு முன்னதாக இருவரும் அலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையிலும்., மாணவிகள் இருவருக்கும் காதல் தொல்லைகள் ஏதேனும் இருந்ததா? அல்லது கல்லூரியில் பாலியல் தொல்லைகள் ஏதேனும் வழக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in puthukottai girl friend attempt suicide police investigation going on