பேருந்தின் பின்புற டயரில் காற்று இறங்குகிறதா? உன்னிப்பாக சோதித்த மதுபோதை ஆசாமி... கொலமாஸ் சம்பவம்.!! அரங்கேறிய விபரீதம்.!!
in puthukottai aranthangi bus stand drinking culprit activity
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை சுமார் 3 மணியளவில் மதுபோதையில் தள்ளாடிய நபரொருவர் ரகளையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். பின்னர் அங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற நிலையில்., அங்கு அரசு விரைவு பேருந்து நின்றுள்ளது.
பேருந்தை கவனித்த அவர் சுற்றும் முற்றும் தள்ளாடிய நிலையில் சென்று பேருந்தின் பின்புற டயரின் மீது தலைவைத்து ஒய்யாரமாக உறங்கியுள்ளார். பேருந்து புறப்படுத்தவதற்கு தயாராகி பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு பேருந்தில் எறியுள்ளார். பேருந்தில் ஏறிய ஓட்டுநர் பின்னால் பேருந்து வருகிறதா? என்பதை கவனிக்க கண்ணாடியை பார்த்துள்ளார்.
இந்த சமயத்தில் பேருந்து ஓட்டுனருக்கு பேரதிர்ச்சியாக பேருந்தின் பின்புற டயரில் தலைவைத்து படுத்திருந்த நபரை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி அவரை எழுப்பிய நேரத்தில்., மது போதையில் பேருந்து ஓட்டுனரிடம் சண்டையிட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் போதை ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில்., பேருந்து புறப்பட்ட தயாரான தருணத்தில் பேருந்தின் கீழே தனது கையை வைத்து பேருந்தை சிறைபிடிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து போதை ஆசாமியை அலேக்காக காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.
மேலும்., பேருந்து தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளான நிலையில்., இது குறித்து காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும்., இது போன்ற குடிகார பேர்வழிகளால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்., பேருந்தின் ஓட்டுநர் நம்பிக்கையின் அடிப்படையில் பேருந்தை இயக்கியிருந்தால் தலை நசுங்கி உயிரிழந்து இருப்பார் என்றும் தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthukottai aranthangi bus stand drinking culprit activity