பள்ளி வேனின் முன் சக்கரம் தனியே கழன்று சாலையில் ஓடிய சோகம்.! 40 குழந்தைகளுக்கு காத்திருந்த பேரதிஸ்டம்.!!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தேங்காய் திட்டு பகுதியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் நிலையில்., பள்ளியின் வேன் மூலமாக பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர்களை அழைத்து வருவது வழக்கம். 

இந்த நிலையில்., இன்று காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களை கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அழைத்து வந்து கொண்டு இருந்த நிலையில்., வேன் கிருமாம்பாக்கம் பகுதியில் வந்துள்ளது. 

அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகே வந்து கொண்டு இருந்த சமயத்தில்., வேனின் முன்பக்க அச்சானது எதிர்பாராத விதமாக முறிந்து சக்கரங்கள் இரண்டும் கழன்று ஓடியது. சாலையில் ஓடிய சக்கரம் அங்குள்ள தடுப்புசுவரில் சென்று மோதவே., வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. 

puthuchery, private school bus,

இந்த விபத்து ஏற்பட்டதும் வேனில் இருந்த பயணிகள் அலறித்துடிக்கவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பதறியபடி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் நல்ல வேலையாக யாருக்கும் அடிபடவில்லை. சில மாணவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த நிலையில்., அவர்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினர். 

இந்த சம்பவத்தால் அங்குள்ள பகுதியில் சாலை நெரிசல் ஏற்பட்டது. கிறேன் மூலமாக வேன் மீட்கப்பட்ட நிலையில்., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தையும்., சிறிது பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery private bus tyre problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->