போதையில் உறங்கியவர் சட்டையில் கைவிட்ட குடிகாரன்.. காத்திருந்த பேரதிர்ச்சி.. சிறுநீர் கழிக்க சென்று கைலாச பயணம் ஏற்ற பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்தவர் டேனியல் (வயது 52). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள டயர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவியின் பெயர் மல்லிகா. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், டேனியலிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக மூத்த மகளான சித்ராவின் இலலத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் உள்ள நபர்களுக்கு தெரியாமல் கண்ணியகோவில் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு செல்லும் வழக்கத்தை வைத்திருந்த டேனியல், சம்பவத்தன்று மாலை நேரத்தில் மகளிடம் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு மது அருந்த சென்றுள்ளார். இதன் பின்னர் வீடு திரும்பாத நிலையில், அங்குள்ள பச்சைவாழியம்மன் கோவில் பகுதியில் தலைகுப்புற பிணமாக இருந்துள்ளார். இவரது உடலை கண்ட நபர்கள், இது தொடர்பாக கிருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பார்க்கையில், டேனியல் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாயும் மதுபானக்கடை வரை சென்று நின்றுள்ளது. இதன்பின்னர் டேனியலின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், டேனியல் கோவிலில் மது போதையில் படுத்திருத்துள்ளார். நள்ளிரவு நேரத்தின் போது கோவிலுக்கு வருகை தந்த வாலிபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் குற்றவாளிகளின் உருவங்கள் பதிவாகியுள்ளதா? என்பது தொடர்பாக சோதனை செய்தனர். இந்த சோதனையில், பிள்ளையார்குப்பம் நாடார் தெரு பகுதியை சார்ந்த கட்டிட தொழிலாளி ராஜாராம் (வயது 41) என்பவனின் முகம் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து ராஜாராமை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்தது உறுதியானது. இது தொடர்பான வாக்குமூலத்தில், டேனியல் மாலை வேளையில் மதுபான கடைக்கு வந்து மது அருந்திவிட்டு கோவிலில் போதையில் படுத்திருந்துள்ளார். இரவு மது அருந்த சென்ற ராஜாராம், சுமார் 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில் டேனியலிடம் பீடி இருக்கும் என்று நினைத்து அவரது சட்டைப்பையில் ராஜாராம் கையை விடவே, கண்விழித்துக்கொண்ட டேனியல் ராஜாராமை திட்டியுள்ளார்.

இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட ஆத்திரம் வாய்தகராறாக மாறவே, இருவரும் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளனர். பின்னர் டேனியல் புதர் பகுதிக்கு சென்று சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்த நிலையில், ராஜாராம் டேனியலின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. பின்னர் கைதான ராஜாராமை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Puthuchery man murder by drunken culprit when he want low quality cigarette


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->