காரில் கருகிய நிலையில் இருந்த வாலிபரின் வழக்கில் பகீர் தகவல்.! வெளியான பேரதிர்ச்சி சோகம்.!!
in puthuchery man died in car police investigation going on
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள உழந்தைகீரப்பாளையம் பகுதியை சார்ந்தவர் முத்துக்குமரன் (வயது 32). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்., நேற்று முன்தினதன்று காரில் தீப்பிடித்து எறிந்த நிலையில். உடல் கருகி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த முதற்கட்ட விசாரணையில்., குளிர்பதன இயந்திரத்தில் தீப்பற்றி உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இவர் காருக்குள் வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
முத்துகுமரனின் தொழில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லையின் காரணமாகவும்., காதல் தோல்வியின் காரணமாகவும் மனமுடைந்து இருந்த முத்துக்குமரன்., வாழ்க்கையில் வெறுப்படைந்து காரில் அமர்ந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthuchery man died in car police investigation going on