இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி..! புதுவையில் பரபரப்பு.!!
in puthuchery girl try to rap attempt police arrest culprit
புதுச்சேரி மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் காலனி பகுதியை சார்ந்தவர் முருகன் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழ்நதைகள் உள்ள அந்நிலையில்., இதே பகுதியில் முருகனின் உறவினருடைய பெண் வீட்டில் இருந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த முருகன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் எண்ணத்தோடு., வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டம் வழியாக சென்ற நிலையில்., வீட்டிற்குள் அமைதியாக நுழைந்து மின்விளக்கை அணைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.
இதனால் பதறிப்போன பெண்மணி செய்வதறியாது முருகனின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கவே., முருகன் தனது எண்ணத்தை அரங்கேற்ற பெண்ணை அசுரன் போல பலவந்தப்படுத்தியுள்ளான்.
இதனைத்தொடர்ந்து பெண் அலறவே., இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முருகனை மடக்கி பிடித்து வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு முருகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthuchery girl try to rap attempt police arrest culprit