2 திருமணம் செய்தும்., சிறுமியை சீரழித்த காமுகன்.! விசாரணையில் பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பத்தை சார்ந்தவன் அலெக்ஸ் (வயது 32). இவன் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., அங்குள்ள முதலியார்பேட்டை பகுதிகளில் உள்ள இல்லங்களுக்கு நேரில் சென்று பால் விற்பனை செய்து வந்துள்ளான். 

இந்த நிலையில்., இதே பகுதியை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவியுடன் இவனிற்கு பழக்கம் ஏற்படவே., மாணவியின் பெற்றோர் பெரும்பாலும் இல்லத்தில் இல்லாமல் இருப்பதை அறிந்து உபயோகம் செய்து கொண்டுள்ளான். 

மாணவியிடம் அவ்வப்போது பேச்சு கொடுத்து வந்த காம கொடூரன்., மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனை அலைபேசியில் காட்சிப்பதிவும் செய்து வைத்த காம கொடூரன்., கடந்த ஆறு மாதங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

சிறுமி இதனை வெளியே சொல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில்., வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் அலெக்ஸ் வந்து செல்வது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை எழுப்பவே., இது குறித்து மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில்., மாணவியிடம் அலெக்ஸ் தவறான நோக்கத்தில் நெருங்கியதை கண்டுள்ளனர். 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சத்தமிடவே., அக்கம் பக்கத்தினர் அலெக்ஸை அடித்து நொறுக்கினர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., அவனின் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. மேலும்., அலெக்சிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியாக காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery girl sexual harassment by man police arrest culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->