கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த காதல் ஜோடி.. காரியம் முடிந்ததும் கம்பி நீட்டிய காமுகன்.. கண்ணீரில் நடுத்தெருவில் நிற்கும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டியை அடுத்துள்ள பகுதியில் இளம்பெண் கடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். இவர் அவரது உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிருகம்பாக்கம் பகுதியை சார்ந்த பாலாஜி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

love,

இதனையடுத்து இவர்கள் இருவரும் அங்குள்ள லாஸ்பேட்டை பகுதியில் கணவன் - மனைவியை போல வசித்து வந்த நிலையில், பாலாஜிக்கு சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. 

இதனால் சென்னைக்கு வந்த பாலாஜி சென்னையில் வீடெடுத்து தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், வார விடுமுறையின் போது புதுச்சேரிக்கு வந்து தனது காதலியை சந்தித்து வந்துள்ளான். 

இந்நிலையில், தன்னையும் சென்னைக்கு அழைத்து செல்ல கூறி காதலி வற்புறுத்திய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கோரிக்கை வைத்துள்ளார். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, தனது வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வதாக தெரிவித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பாலாஜி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலாஜி சென்னையில் இருப்பதை அறிந்துகொண்டு, தனிப்படை மூலமாக சென்னைக்கு புதுச்சேரி காவல் துறையினர் விரைந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery girl love with boy cheated


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->