ஆடையை அவிழ்த்து போலீசார் செய்த காரியம்.! கூனி குறுகி தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


புதுவையில் வீராம்பட்டினம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவருக்கும், அவரது தந்தையான  பெரியாண்டிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

நேற்று மாலை அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பெரியாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாக, காவல் துறையினர் சுந்தர மூர்த்தியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது சுந்தர மூர்த்தியின் ஆடைகளை கழற்றி தாக்கி, வீடியோ எடுத்து இனிமேல் தந்தையிடம் தகராறு செய்தால் இந்த வீடியோக்களை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த சுந்தர மூர்த்தி காவல் துறையினர் அநாகரீக செயலால் கூனி குறுகி மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

மயங்கி கிடந்த சுந்தர மூர்த்தியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery boy attempt suicide due to police activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->