உறவினரின் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த கொடூரம்.! இறுதியில் பெண்ணிற்கு துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!!
in puliyangudi girl rapped by a relation police investigation going on
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி தலைவன்கோட்டை பகுதியை சார்ந்தவன் உதயகுமார் (வயது 39). இவன் கனரக லாரியின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இவனுக்கும் அதே பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் திருமணம் முடிந்து., இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்., இவனது வீட்டிற்கு அருகிலேயே உறவினரின் பெண்ணொருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவரிடம் இந்த கொடூரன் நட்பு ரீதியிலான முறையில் பழகி வந்த நிலையில்., இவர்கள் இருவரின் பழக்கமானது காதலாக மாறியுள்ளது.
உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில்., பெண்ணிடம் பேசி ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளான். இவர்களின் கள்ளகாதல் கொடூரத்தில் விழுந்த பெண்., அவனது ஆசைக்கு இணங்கி இருவரும் சேர்ந்த நிலையில்., அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
இது குறித்து உதயகுமாரிடம் பெண் தெரிவித்த நிலையில்., இது குறித்து யாரிடமும் கூறாமல் காத்திரு என்று கூறியுள்ளார். இந்த நிலையில்., பெண்ணிற்கு திடீரென அதிகளவு வயிற்று வலி ஏற்படவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
இளம்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., இது குறித்து மகளிடம் விசாரித்த நிலையில்., உதயகுமாரின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உதயகுமாரை கைது செய்தனர். இந்த சமயத்தில்., பெண்ணிற்கு உடல்நலக்குறைவானது அதிகரிக்கவே., சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
English Summary
in puliyangudi girl rapped by a relation police investigation going on