ஒப்பந்த அடிப்படையில் அரங்கேறும் விபச்சாரம்.! கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரம்..!! புதுச்சேரியில் பேரதிர்ச்சி..!!
in pudhuchery prostitution gang arrested by police
புதுச்சேரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர்., நேற்றிரவு புதுச்சேரி பகுதியில் இருக்கும் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில்., விபச்சாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் புரோக்கர்கள் என 16 பேர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுச்சேரி காமராசர் சாலை பிருந்தாவனம் விடுதியில் விழுப்புரம் பாண்டியன்., தட்டாஞ்சாவடியில் உள்ள சுப்பையா நகர் ரவிசங்கர் (வயது 45)., நெல்லித்தோப்பு பகுதியை சார்ந்த சிவசங்கர் (வயது 34)., கருணாகரன் (வயது 40)., புதுச்சேரி ராஜநகர் பகுதியை சார்ந்த ஜான்பால் (வயது 37) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைப்போன்று அங்குள்ள ரெட்டியார்பாளையம் அரும்பார்த்தபுரம் பகுதியை சார்ந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில்., விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்ட காவல் துறையினர்., விபச்சாரம் நடத்தி வந்த வேலுமணி (வயது 68) என்பவனையும்., தேங்காய்திட்டு புதுநகர் பகுதியை சார்ந்த ராஜேஷ் (வயது 25) என்பவனையும் கைது செய்தனர்.
அங்குள்ள எல்லைப்பிள்ளைசாவடி தனியார் தங்கும் விடுதியில் நடந்த சோதனையில்., பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் செல்வம் (வயது 38) என்பவனையும்., அய்யனார்கோவில் வீதியை சார்ந்த நாகராஜ் (வயது 31) மற்றும் கம்பன் நகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவனையும் கைது செய்தனர். மேலும்., புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் காஞ்சிபுரம் பகுதியை சார்ந்த டெல்லிபாபு (வயது 43) என்பவனையும்., முருகம்பாக்கத்தை சார்ந்த ரமேஷ் (வயது 41) என்பவனையும் மற்றும் செல்வம் (வயது 26)., துரைராஜ் (வயது 37)., சென்னையை சார்ந்த சுந்தர் என்பவனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சோதனையில்., விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 பெண்களில் 4 பெண்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பதும்., மீதமுள்ள நான்கு பெரும் புதுச்சேரி., காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுமட்டுமல்லாது., ஒப்பந்த அடிப்படையில் பெண்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்த புரோக்கர் 3 நாட்களுக்குள் 10 ஆண்களுடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருக்கும் பட்சத்தில்., நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறி அழைத்து வந்துள்ளான். இந்த செய்தியில் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்தது., மீட்கப்பட்ட பெண்களில் 17 வயதுடைய பெண்ணும் உள்ளார் என்பதும்., அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தான் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in pudhuchery prostitution gang arrested by police