பெண் குளிப்பதை ரசித்த கயவனின் வாயை உடைத்த பொதுமக்கள்..! காட்டேரிக்குப்பத்தில் தரமான சம்பவம்.!!
in pondichery culprit arrest by police
இந்த உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக இருந்து வருவது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளது. எந்த சமயத்திலும் யாரால்? எப்போது? என்று எந்த விதமான பாதுகாப்பு இல்லாத தருணத்தில்., வாழ்க்கையை பெரும் துயரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காட்டேரிக்குப்பம் அருகேயுள்ள சந்தை புதுகுப்பம் ஒத்தவாடை வீதியை சார்ந்தவர் கோவிந்தன். இவரது மகனின் பெயர் பரதி (வயது 24). இவர் அங்குள்ள சேதாரப்பட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறான்.
இவன் அதே பகுதியில் இருக்கும் பெண்கள் இல்லத்தில்., அவர்கள் குளிப்பதை மறைமுகமாக பார்த்து ரசித்து வந்துள்ளான். இதனை கண்ட பெண்கள் தங்களின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில்., உறவினர்கள் பரதியை கண்டித்துள்ளனர்.
பல முறை தொடர்ந்து கண்டித்தும் கேட்காத நிலையில்., சம்பவத்தன்று அதே பகுதியில் 23 வயதுடைய பெண் குளித்து கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில்., வீட்டின் பக்கத்தில் நடைபெற்று கொண்டு கட்டிட வேளையில் இருந்த பரதி., அங்கிருந்தவாறு இதனை கவனித்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரையவே., இதனை உணர்ந்து கொண்ட கயவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இவனை விரட்டி பிடித்த பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., தகவலை அறிந்ததும் விசாரணை மேற்கொண்டு பாரதியை கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in pondichery culprit arrest by police