பொள்ளாச்சியில் மீண்டும் பேரதிர்ச்சி.! காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை... திகைத்துப்போன பொள்ளாச்சி மக்கள்.!!
in pollachi prostitution going on police arrest
இந்தியாவில் விபச்சாரம் நடைபெறுவதற்கு சில இடங்களில் அனுமதி இருந்தாலும்., பல மாநிலங்களில் விபச்சாரம் என்பது சட்டப்படி அனுமதி இல்லாமல் இருக்கிறது. விபச்சாரம் நடைபெற அனுமதி இருக்கும் இடங்களில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று வரும் நிலையில்., அனுமதி இல்லாத மாநிலங்களில் மறைமுகமாக நடந்து வருகிறது.
விபச்சாரத்திற்கு விருப்பப்பட்டு வரும் பெண்களை அழைத்து வந்தும்., பிற மாநிலங்களில் இருந்து பெண்களை கடத்தி வந்தும் விபச்சாரம் அரங்கேறி வருகிறது. மேலும்., தமிழகத்திலேயே விபச்சாரம் அனுமதியற்று நடைபெற்று வரும் நிலையில்., மசாஜ் செண்டர் என்ற பெயரிலும் விபச்சாரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்., தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகேயுள்ள அனுப்பர்பாளையம் பகுதியை அடுத்துள்ள கிராமத்தில்., வீடெடுத்து வாடகைக்கு தம்பதியினர் தங்கியிருந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் தங்கியிருந்த இல்லத்திலேயே விபசாரம் செய்து வந்த நிலையில்., வழக்கத்திற்கு மாறான ஆட்களின் நடமாட்டத்தை மக்கள் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினருக்கு இவர்கள் தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில்., வழக்கத்திற்கு மாறான ஆட்களின் நடமாட்டத்தை கவனித்து., பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த புரோக்கர் செல்வராஜா மற்றும் அவனது மனைவியை கண்டுள்ளனர்.
பின்னர் கணவன் - மனைவி இருவரையும் கைது செய்த காவல் துறையினர்., விபச்சாரத்திற்கு ஈடுபட இருந்த பெண்களையும் மீட்டு காப்பகத்தில் வைத்தனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில்., தலைமறைவாக இருக்கும் அருள் ஜோதி என்பவனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in pollachi prostitution going on police arrest