சிறுமியை 10 பேர் சேர்ந்து கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்க அரங்கேறிய நாடக காதல்.! விசாரணையில் வெளியாகும் பகீர் தகவல்.!!
in pollachi once again sexual harassment police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தளவில் பல அத்துமீறல்கள் நடந்து கொண்டு இருப்பது வெளிவந்து பெரும் பரபரப்பை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமிக்கு தாயார் இறந்துவிட்டார். சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை மணந்து கொண்டு சென்ற நிலையில்., சிறுமி அவரது பாட்டியின் இல்லத்தில் தங்கியிருந்து பயின்று வந்துள்ளார். இந்த நிலையில்., சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வந்த சூழலில்., பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., சிறுமி வீட்டில் இருந்து வந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்த வாலிபன் ஒருவனுடன் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கமானது நட்பு ரீதியாக தொடந்து வந்த நிலையில்., காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில்., நாடக காதலை அரங்கேற்றி சிறுமியின் மனதை மயக்கிய காம கொடூரன் தன்னுடைய வீட்டிற்கு சிறுமியை வர கூறி அழைப்பு விடுத்துள்ளான்.
இவனது அழைப்பில் உள்ள விபரீதத்தை அறியாத சிறுமி அவனது இல்லத்திற்கு சென்று இருவரும் பேசி கொண்டு இருந்த நேரத்தில்., இவனது இல்லத்தில் அதிரடியாக அவனது நண்பர்கள் 10 பேர் வந்துள்ளனர். இவன்கள் அனைவரும் சிறுமியை கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்க நினைத்துள்ளனர். இவன்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி சம்பவ இடத்தில இருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இந்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் சிறுமியின் நண்பர்களை அனைவரையும் கைது செய்த காவல் துறையினர்., தப்பியோடிய ஒருவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது மீண்டும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in pollachi once again sexual harassment police investigation going on